பக்கம் எண் :

 120. திருவையாறு1119


கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளின்மேயான்
அடியார்பண் பிகழ்வார்க ளாதர் களே. 7

1289. திருநீல மலரொண்கண் டேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 8

1290. வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய வளந்தானு முள்ளு தற்கங்
கரியானு மரிதாய கள்ளின் மேயான்
பெரியானென்றறிவார்கள் பேசு வாரே. 9

__________________________________________________

உண்டு திரியினும் பலவாறு பிதற்றினும்அவர்கள் மனம் இறைவன் திருவருளிலேயே அழுந்தியிருக்குமாதலின் அடியவர்களின் குணம் செயல்களை இகழ்பவர்கள் அறியாதவர்களாவர்.

கு-ரை: கள்ளில் மேயான் அடியார்கள் நீறணியினும், தேனைக் குடித்து ஊர்திரியினும், கூப்பிடினும் அவர்களை இகழ்வார்கள் கீழ் மக்கள் என்கின்றது. ‘எத்தொழிலைச் செய்தாலும், ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் மோனத்தே’ இருக்குமாதலின் அவர்களை யிகழ்வார் ஆதர் என்றவாறு.

8. பொ-ரை: அழகிய நீலமலர் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முப்புரி நூலும் திருநீரும் பொருந்திய மார்பினனாய் விளங்கும் கரிய மிடற்று அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது கருநீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலமாகும்.

கு-ரை: கள்ளிலே இறைவன் என்றும் பேணுவது என்கின்றது. பேணுவது - விரும்புவது.

9. பொ-ரை: சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும், நினைத்தற்கும் அரியவனாய் விளங்கும் பெரியோனாகிய இறைவன், அரியதலமாய் விளங்கும் கள்ளிலில் எழுந்தருளி உள்ளான். அறிந்தவர்கள் அவனையே பெரியோன் எனப்போற்றிப் புகழ்வர்.