பக்கம் எண் :

 120. திருவையாறு1121


120. திருவையாறு

திருவிராகம்

பண் : வியாழக் குறிஞ்சி

பதிக எண்: 120

திருச்சிற்றம்பலம்

1293. பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநக ரந்தணை யாறே. 1

1294. கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியத ளரவரை
ஆர்த்தவன் வளநக ரந்தணை யாறே. 2

__________________________________________________

1. பொ-ரை: தண்னை வணங்கும் அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடுஅவர்கட்கு அருள் வழங்கத் துணிந்திருப்பவனும், மார்பின்கன் மான்தோலோடு விளங்கும் முப்புரி நூல் அணிந்தவனும், பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும், ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.

கு-ரை: அடியார்களுடைய அருவினைகளை யறுத்து அருள் செய்யத்துணிந்தவன்; தோல் சேர்ந்தநூல் செறிந்த மார்பினையுடையவன்; அரவோடு ஆமை ஒட்டைப் பிணித்தவன் வளநகர் ஐயாறு என்கின்றது. பணிந்தவர் - தார்வெனும் தன்மையோடு அடிபணிந்த அடியார்கள். அருவினை - திருவருளன்றி வேறொன்றாலும் நீக்குதற்கரியவினை. பிணித்தவன் எனற்பாலது எதுகை நோக்கி பிணிந்தவன் என மெலிந்தது.

2. பொ-ரை: புகழ் மிக்கவனும், பகைவர்களாகிய அவுணர்களின் முப்புரங்களைப் பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி விழியால் பார்த்தவனும், குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடி மீது வைத்துள்ளவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும்,