பக்கம் எண் :

1128திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1305. மழைநுழை மதியமொ

டழிதலை மடமஞ்ஞை

கழைநுழை புனல்பெய்த

கமழ்சடை முடியன்

குழைநுழை திகழ்செவி

யழகொடு மிளிர்வதொர்

இழைநுழை புரியண

லிடமிடை மருதே. 2

1306. அருமைய னெளிமைய

னழல்விட மிடறினன்

கருமையி னொளிபெறு

கமழ்சடை முடியன்

பெருமையன் சிறுமையன்

பிணைபெணொ டொருமையின்

இருமையு முடையண

லிடமிடை மருதே. 3

__________________________________________________

2. பொ-ரை: மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசை வற்றிய தலையோடு ஆகியவற்றையும்,மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்டமுப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திரு விடைமருதூராகும்.

கு-ரை: மதியத்தையும் கபாலத்தையும் கங்கையையும் தாங்கிய சடையன்; குழைக்காதோடு விளங்கும் பூணுலையணிந்த அண்ணல் இடம்இது என்கின்றது. மழை நுழை மதியம் - மேகத்தினூடே நுழையும்பிறை. அழிதலை - தசைநார் அழிந்த பிரமகபாலம், மடமஞ்ஞை கழை நுழை புனல் - இளைய மயில்கள் மூங்கிலிடையே நுழைகின்ற தேவகங்கை. இழை நுழைபுரிஅணல் - இழையாகத் திரண்ட முப்புரிநூலை அணிந்த பெருமையிற் சிறந்தவன்.

3. பொ-ரை: அன்பில்லாதவர்க்கு அரியவனும்,அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு