பக்கம் எண் :

 122. திருவிடைமருதூர்1133


1313. துவருறு விரிதுகி

லுடையரு மமணரும்

அவருறு சிறுசொலை

நயவன்மி னிடுமணல்

கவருறு புனலிடை

மருதுகை தொழுதெழும்

அவருறு வினைகெட

லணுகுதல் குணமே. 10

1314. தடமலி புகலியர்

தமிழ்கெழு விரகினன்

இடமலி பொழிலிடை

மருதினை யிசைசெய்த

__________________________________________________

கு-ரை: திருமாலும் பிரமனும் மாறுபட இன்னதென அறிய முடியா வடிவத்தோடு எழுந்த பெருமானிடம் இது என்கின்றது. மருதிடை நடவிய மணிவணர் - மருதமரங்களினிடையே கட்டிய உரலோடு புகுந்த கண்ணன். இனது எனக் கருதிடல் அரியது - இன்னது என்னக் கருதமுடியாத. எருது - இடபம்.

10. பொ-ரை: துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.

கு- ரை: புறச்சமயிகள் பேச்சை விரும்பாதீர்கள், இடை மருதினைக் கைதொழும்; அவர்களின் வினை கேட்டையணுகுதல் குணம் என்கின்றது. துவர் உறு உடையர் - புத்தர்.

11. பொ-ரை: நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.