1319. உரையரு முருவின ருணர்வரு வகையினர்
அரைபொரு புலியத ளுடையின ரதன்மிசை
இரைமரு மரவின ரிடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. 5
1320. ஒழுகிய புனன்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை யடிகள தறைகழல்
எழிலின ருறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர்துயருற லிலரே. 6
1321. கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமக ளுலவிய சடையினர்
_________________________________________________
5. பொ-ரை: சொல்லுதற்கரிய அழகரும்,
உணர்வதற்கரிய தன்மையரும், இடையில் பொருந்திய
புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை
விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும்
ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து
போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.
கு-ரை: சொல்லுதற்கரிய உருவினரும்,
உணர்தற்கரிய தன்மைகளை உடையவரும்,
புலித்தோலாடையினரும் ஆன இறைவனது இடைமருதென
நினைக்கவும் பேசவும் வல்லவர்கட்குப் புகழ் மிக
உளதாம் என்கின்றது. இரை மரும் அரவினர் - உணவை
உட்கொள்ளும் பாம்பினையுடையவர். உளம் உடையவர்,
உரைகளது உடையவர்(க்குப்) புகழ் உளது என முடிக்க.
6. பொ-ரை: வழிந்தொழுகும் கங்கை
நதி, இளம்பிறை, பாம்பு ஆகியன உறையும் அழகிய
சடைமுடியை உடையவரும், ஒலிக்கின்ற வீரக்கழலை
அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து
மலர் கொண்டு போற்றித் தொழுது எழுவார்
துன்புறுதல் இலராவர்.
கு-ரை: இடைமருதை மலர்கொண்டு
தொழுவார் துயருறுதல் இலர் என்கின்றது. அடிகளது
இடைமருது, அறைகழல் எழிலினர் உறையிடைமருது எனத்
தனித்தனி இயைக்க.
7. பொ-ரை: வீணையை மீட்டி
இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும்,
கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலை
|