1331. தரைமுத லுலகினி லுயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே. 6
1332. நலிதரு தரைவர நடைவரு மிடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவ னெழின்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்விலி வலமுறை யிறையே. 7
_________________________________________________
கொண்டு. கடி கணபதி - தெய்வத்தன்மையுடைய
விநாயகப் பெருமான். கொடைவடிவினர் - வள்ளற்
பெருமக்கள்.
6. பொ-ரை: அழகிய மலைபோலத் திகழும் மதில்
சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய
அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள்
ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம்
மிக்க கூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய்
விளங்கித் தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின்
சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு
இருக்க அருள்புரிபவனாவான்.
கு-ரை: பிருதிவியண்டம் முதலான பல்வேறு அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் போகம் நுகரத்
தாம் போகியாயிருந்து உமாதேவியோடு
பொருந்துகின்ற இறைவன் இவன் என்கின்றது. சென்ற திருப்பாடலில்
உமை பெண்யானையாக, இவர் ஆண்யானையானார் என்ற
வரலாற்றுக்கு ஏது கூறி ஐயம் அகற்றியது. புணர்தகை -
புணர்ச்சியை எய்துவதற்காக. விரை - மணம். விரவது -
கலத்தலை. தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு நரை திரை
முதலியனகெட, என்றும் இளமையோடிருக்க அருளினன் என்பதாம்.
7. பொ-ரை: அழகுமிக்கக் கவின் கலை முதலான
தொழில்கள் வளரும் வலிமை மிக்க மதில்களால்
சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மண்ணை
மிதிப்பதற்கே அஞ்சும் மென்மையான பாதங்களையும்,
அசையும் இடையினையும் உடைய அழகிய தாருகாவன மகளிர்
உறையும் மனைகள் தோறும் சென்று புகுந்து பலி ஏற்கப்பிட்சாடனனாய்
வருபவன்.
கு-ரை: பூமியை மிதிப்பதற்கு அஞ்சும் மெல்லிய
பாதமுடைய
|