பக்கம் எண் :

 124. திருவீழிமிழலை1147


124. திருவீழிமிழலை

திருவிராகம்

பண்: வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 124

திருச்சிற்றம்பலம்

1337. அலர்மகண் மலிதர வவனியி னிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர்
நலமலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே. 1

1338. இருநில மிதன்மிசை யெழில்பெறு முருவினர்
கருமலி தருமிகு புவிமுத லுலகினில்
இருளறு மதியின ரிமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே. 2

_________________________________________________

1. பொ-ரை: மலர்நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும், அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபிரானது நிலவுலகத்தே நிறைந்த புகழை உடைய மிழலை நகரை நினைய வல்லவர் திருமகளின் கருணையால் செல்வம் நிறையப் பெற்று உலகில் வாழ்வர்.

கு-ரை: திருவீழிழலையை நினையவல்லவரே சீதேவி சிறக்க இப்பூமியில் வாழ்பவராவர் என்கின்றது. அலர்மகள் - லஷ்மி. அவனி - பூமி. இடம் - இடப்பாகம். நலம் - அழகு. உமைதனை இடம் மகிழ்பவர் உருவுடையவர் நகராகிய வீழிமிழலையை நினைபவர் அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் எனக்கூட்டிப் பொருள் காண்க.

2. பொ-ரை: எண்ணற்ற உயிரினங்கள் வாழும் மண் முதலிய அனைத்துலகங்களிலும் இருளைப் போக்கும் மதி போல ஒளியும் தண்ணளியும் செய்பவரும், தேவர்களால் தொழப் பெறும் தன்னொப்பார் இல்லாதவரும் ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள் பரந்து விரிந்த இவ்வுலகில் அழகிய உருவோடு விளங்குபவர் ஆவர்.

கு-ரை: மண் முதலாகிய அண்டத்தில் மயக்கமலமற்ற உண்மை ஞானிகளும் தேவர்களும் தொழும் உவமனிலியாகிய இறைவன்