பக்கம் எண் :

1150திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 7

1344. ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கனன் மணிமுடி யொருபது மிருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. 8

1345. அடியவர் குழுமிட வவனியி னிகழ்பவர்
கடிமல ரயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுக ணிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே. 9

_________________________________________________

வண்ணம் கொய்த சிவபிரான் உறையும் செழுமையான நகராய், மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு வேத விதிகளையும், அறநெறிகளையும் அறிந்தவர்கள் நிரம்பிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்தம் கைகளால் பலகாலும் கொடுக்கும் வள்ளன்மையோடு கூடிய உள்ளத்தைப் பெறுவர்.

கு-ரை: மிழலை நினைவார் வள்ளலாவார் என்கிறது. கரம் பயில் கொடையினர் - கை பலகாலும் பயின்ற வள்ளன்மையையுடையவராவர். கடிமலர் - மணமுள்ளமலர். பயில்வு அற எறி சிவன் எனப் பிரிக்க. வரம் - மேன்மை.

8. பொ-ரை: இராவணனுடைய மணிமுடி தரித்த பத்துத் தலைகளும், இருபது கரங்களும் நெரியுமாறு தன்மலர் போன்ற திருவடியின் விரலைக் கொண்டு நெரித்தருளியவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர் ஒன்றுபட்ட உணர்வோடு ஒளி நெறியாகிய ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்.

கு-ரை: மிழலையை நினைவார் ஒன்றுபட்ட உணர்வோடு ஞானமார்க்கத்தை நாடுவர் என்கின்றது. ஒருக்கிய - ஒன்றுபட்ட. ஒளிநெறி - சிவஞானமார்க்கம். கரக்கனம் - கைகளாகிய கூட்டம்.

9. பொ-ரை: மணம் மிக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், திருமாலும் நினைதற்கு அரிய வகையில் தழல் வடிவோடு எல்லா உலகங்களிலும் நிறைந்தருளிய பெரியோனாகிய சிவபிரானது