பக்கம் எண் :

 126. திருக்கழுமலம்1157


என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடு முடையரிவ் வுலகே. 9

1357. புத்தரொ டமணர்க ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே 10

1358. புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை

_________________________________________________

யோர் சென்று அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கி சிவபிரான் உறையும் சிவபுரம் என்று இருபொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு துன்பமும் இலராவர். இவ்வுலகில் புகழோடும் பொருந்தி வாழ்வர்.

கு-ரை: சிவபுரத்தை இருவேளையிலும் வழிபடுவார் துன்பஞ்சேரார்; இவ்வுலகிற் புகழொடும் பொருந்துவர் என்கின்றது. அன்று இயல் உருவு - கோபித்த இயல்பினையுடைய வடிவம், சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் எனப்பிரிக்க.

10. பொ-ரை: புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுத்து விடையூர்தியை உடையதலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச் செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்.

கு-ரை: புறச் சமயிகளுடைய புறவுரைகள் வித்தகம் ஒழியா; ஆதலால் சிவபுரத்தைத் தொழுதல் உங்கட்குச் சிறந்த குணமாம் என்கின்றது. அவர்களது அறவுரையாகத் தோன்றுவன யாவும் புறம்பான உரைகளாம்; அதுவேயும் அன்றிச் சதுரப்பாடு உடையனவும் அல்ல. மெய்த்தக - உண்மையாக.

11. பொ-ரை: அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன் தமிழைக் கொண்டு சிவபுர நகரில் உறையும் எந்தையைப் போற்றி உரை செய்த இவ்விசை