1381. கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை. 12
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
பொருட்டு அவளது சரீரம் எல்லாம்
சுகந்தமொய்க்கும்படி அவளுடனே பொருந்திய
பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி
அருச்சிக்கப்படுதலால். பராசரமுனிவரால்
பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள
கொச்சை நகரம் என்னும் திருப்பதியிலே
எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி
தரிசனம் பண்ணி வழிபடமாட்டார்களது நினைவு
எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும்
வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ
போதமாயிருக்கும்.
12. கு-ரை: மிகுதிப்பட்ட
தோஷமாயுள்ள சுக்கில சுரோணிதமாகிய இருவகை
நீரின்கண்ணே சிரமுதலாகிய அவயவமாகத்
தோன்றிப் பூமியின்கண் செனித்துப்
பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற
சென்மத்தையும் பரிணமித்தல் - வேறுபடுதல். கீழ்ச்
சொல்லிப்போந்த சென்மத்தையும் கழுவி
மலத்திரயங்களையும் கழுவாநிற்கும். தனது
பாதியாகிய திருவருளினாலே என்னை அகப்படுத்திக்
கவளிகரித்துக் கொண்டு அந்த அருள்வழியாக
எனதிடத்தில் இடையறாமல் வாழும் தன்னை
எனக்குத்தந்த அடிமை குலையாமல் எக்கண்ணும் விட்டு
விளங்கும் கர்த்தர். பாதி எனற்பாலது பதி எனக்
குறுகி நின்றது. மாயா மயக்கத்தின்கண்ணே மயங்கி
பெத்த முத்தி இரண்டும் தெரியாமல்
திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று
அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளங்கப்படாநின்ற
பொன்னுருவையுடையவனாய்ச் சிருஷ்டிக்குக்
கர்த்தாவாகிய பிரமனது சிரக்கபாலத்திலே
பிச்சைகொண்டு நுகரும் கருணை யாளனே! திருக்கழுமலம்
என்னும் மூவாப் பழங்கிழமைப் பன்னிரு பெயர்பெற்ற
அனாதிமூலமாகிய பதியிடத்துக் கவுணிய
கோத்திரத்திலே தோன்றப்பட்ட யான்
நிவேதிக்கப்படும் காட்டாகிய இப்பாடலைக்
கீழ்ச்சொன்னவற்றிலும் மலத்திரயங்களிலும்
அழுந்தாநின்ற ஒருத்தராகிலும் பலராகிலும் உரை
செய்வார் உயர்ந்தாரேயாதலால் இப்பாடலை
இடைவிடாமல் உரைசெய்வீராக. காட்டு என்பது கட்டு
எனக் குறுகிநின்றது.
|