128. திருப்பிரமபுரம்
பதிக வரலாறு:
(117 - ஆம் பதிகம் பார்க்க)
திருவெழுகூற்றிருக்கை
பண் : வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 128
திருச்சிற்றம்பலம்
1382. ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக
ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை. 5
இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள
குறிப்புரையே. முதலிலும், அதைத்தொடர்ந்து
பொழிப்புரையும் எழுதப் பெற்றுளது.
கு-ரை: ஓருருவாயினை - என்றது,
எல்லாத் தத்துவங்களையுங் கடந்து
வாக்குமனாதிகளுக்கு எட்டாமலிருந்துள்ள
தற்கருபந்தான் பஞ்சகிர்த்தியங்களையும்
நிகழ்த்தவேண்டி நினது இச்சையால்
எடுத்துக்கொண்டிருக்கும் திருமேனியை (எ-று)
மானாங்காரத்தீரியல்பாய் - என்றது.
மானென்பது - சத்தி - ஆங்காரத்தீரியல்பாய் -
தற்சத்தியைக் கொண்டு சர்வானுக் கிரகமான
பஞ்சகிர்த்தியங்களை நடத்த வேண்டிச் சத்தி
சிவமாகிய இரண்டு உருவாயினை எ-று.
ஒரு - என்றது. அந்தச் சத்தியுடனே கூடி
யொன்றாகி நின்றனை எ-று.
விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர்
உம்பர்கள் பிறவும் படைத்தளித்தழிப்ப
மும்மூர்த்திகளாயினை - என்றது. ஆகாச முதலாகப்
பூமியீறாகவுள்ள பஞ்சபூதங்களையும்
சந்திராதித்தர்களையும் தேவர்களையும் மற்றுமுள்ள
ஆத்மாக்களையும் படைக்கைக்கும், காக்கைக்கும்,
அழிக்கைக்கும், பிர்மா விஷ்ணு உருத்திரன்
என்கின்ற திரிமூர்த்திகளுமாயினை எ-று.
இருவரோடு ஒருவனாகி நின்றனை - என்றது.
பிரமாவையும்
|