ஒப்பற்ற கல்லால மர நிழலில் உனது
இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர்,
சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக்
காட்டினாய்.
சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை
மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய
பேரிருளை ஓட்டினாய்.
கங்கையையும் பாம்பையும்
பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்,
ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும்
முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு
கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம்
ஆகியவற்றையும் ஏந்தினாய்,
சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு
கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி
குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப்
போர்த்தாய்,
ஒப்பற்ற வில்லின் இருதலையும்
வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை
இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள்
இறந்துகிடக்குமாறு அழித்தாய்.
ஐம்புலன்கள் நான்கு அந்தக்
கரணங்கள், முக்குணங்கள் இருவாயுக்கள் ஆகியவற்றை
ஒடுக்கியவர்களாய் தேவர்கள் ஏத்த நின்றாய்,
ஒருமித்த மனத்தோடு, இரு
பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும்
செய்யத் தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி
ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும்
ஓதி பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி
கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும்
பிரமபுரத்தை விரும்பினாய்,
ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும்
பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,
தேவர்கள் புகலிடம் என்று கருதி
வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த
கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை
விரும்பினாய். மூவுலகும் நீரில் அழுந்தவும் தான்
அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்.
வழங்கக் குறையாத செல்வ வளம் மிக்க
|