பக்கம் எண் :

1190திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


129. திருக்கழுமலம்

பண் : மேகராகக்குறிஞ்சி

பதிக எண்: 129

திருச்சிற்றம்பலம்

1383. சேவுயருந் திண்கொடியான் றிருவடியே

சரணென்று சிறந்தவன்பால்

நாவியலு மங்கையொடு நான்முகன்றான்

வழிபட்ட நலங்கொள்கோயில்

வாவிதொறும் வண்கமல முகங்காட்டச்

செங்குமுதம் வாய்கள்காட்டக்

காவியிருங் கருங்குவளை கருநெய்தல்

கண்காட்டுங் கழுமலமே. 1

1384. பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய

மலைச்செல்வி பிரியாமேனி

அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தா

னமரர்தொழ வமருங்கோயில்

_________________________________________________

1. பொ-ரை: விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் வாய்களையும், காவிமலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண் விளங்குவதாகும்.

கு-ரை: ‘விடையுயர்த்த பெருமான் திருவடியே சரண்‘ என்று பிரமன் வழிபட்ட கோயில், நீர்ப்பூக்கள் நேரிழையார் அவயவங்களைக் காட்டும் கழுமலம் என்கின்றது. சே - இடபம். நா இயலும் மங்கை - சரஸ்வதி.

2. பொ-ரை: அகன்ற விழிகளையும், பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை