பக்கம் எண் :

1192திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1386. பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்

சயமெய்தும் பரிசுவெம்மைப்

போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு

சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்

வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்

சூளிகைமேன் மகப்பாராட்டக்

காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு

மகிழ்வெய்துங் கழுமலமே. 4

1387. ஊர்கின்ற வரவமொளி விடுதிங்க

ளொடுவன்னி மத்தமன்னும்

நீர்நின்ற கங்கை நகு வெண்டலைசேர்

செஞ்சடையா னிகழுங் கோயில்

_________________________________________________

கு-ரை: தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய எழுந்த விடத்தை உண்டு கறுத்தகண்டன் உறைகோயில் இது என்கின்றது. அலங்கல் - மாலை. விலங்கல் - மலை. புயல் - மேகம். மீன் சனி புக்கு - மகர ராசியில் சனி புகுந்து. ஊன் சலிக்கும் காலத்தானும் - உடல் வாடிய காலத்திலும். பஞ்சகாலத்தும் கலங்காத வள்ளல்கள் வாழும் நகர் என்க.

4. பொ-ரை: மண்ணுலக மக்களை வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.

கு-ரை: உலகை வருத்தி, தேவர் அஞ்ச, வெல்லும் வகை வில்லை வளைத்து புரம் எரித்த இறைவன் கோயில் இது என்கின்றது. பார் - பூமி. நலிந்து - வருத்தி. வார் - கச்சு. சூளிகை - உச்சி. மகளிர் மாளிகையின்மேல் குழந்தைகளைத் தாலாட்ட அதனைத் தேவர் கேட்டு மகிழும் கழுமலம் என்க.

5. பொ-ரை: ஊர்ந்து செல்லும் அரவு. ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்த மலர், நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை