ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாடக் கழுமலமே. 5
1388. தருஞ்சரதந் தந்தருளென்
றடிநினைந்து
தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும்
பீடார்தோ
ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
வதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய
வகம்பாயுங் கழுமலமே. 6
_________________________________________________
ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய
சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு
பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி
நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று
அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால்
சூழப்பெற்றுக் கவின்மிகுவனவுமாய வெண்மையான
சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமல
நகரில் உள்ளது.
கு-ரை: அரவம், மதி, வன்னி,
ஊமத்தம், கங்கை, கபாலம் இவை பொருந்திய
செஞ்சடையான் கோயில் கழுமலம் என்கின்றது. ஏர் -
அழகு.
6. பொ-ரை: மெஞ்ஞானியர்க்குத்
தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று
திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம்
செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை
நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை
மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான்
உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில்
முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக்
குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில்
நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள்
ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரில்
உள்ளதாகும்.
கு-ரை: அருளுக என்று அடிநினைந்து, தீ
நடுவில் தவஞ்
|