1441. கரிந்தா ரிடுகாட்டி லாடுங்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டி லாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறிய லூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 5
1442. அரவுற்ற நாணா வனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே. 6
1443. நரையார் விடையா னலங்கொள் பெருமான்
அரையா ரரவம் மழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 7
_________________________________________________
5. பொ-ரை: நான்கு வேதங்களையும்
ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த
மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில்
விளங்கும் வீரட்டானத்து இறைவர், இறந்தவர்களைக்
கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும்
கபாலி.
கு-ரை: கரிந்தார் - இறந்தவர்.
புரிந்தார் - வினைகளைப் புரிந்தவர். படுதம் -
கூத்துவகை. அக்கூத்தினைச் சுடுகாட்டில் விரும்பி
ஆடுபவன். புறங்காடு - சுடுகாடு. தெரிந்து ஆர்
மறையோர் - ஆராய்ந்தறிந்த அந்தணர்.
6. பொ-ரை: தெருக்களில் நடப்பட்ட
கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில்,
பிறவிப் பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும்
வீரட்டானத்து இறைவன், வாசுகி என்னும் பாம்பை
மேருவில்லில் நாணாக இணைத்து அனலை அம்பாகக்
கொண்டு தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத்
தீ எழுமாறு செய்து அழித்தவன்.
கு-ரை: அரவு உற்ற நாணா(க) அனல்
அம்பு அது ஆக செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்
எனப்பிரிக்க. செரு - போர். வெருவுற்றவர் -
அஞ்சியவர்.
7. பொ-ரை: அலைகளையுடைய
நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம்
பொருந்திய மலர்ச் சோலைகளை உடையதுமான திருப்
|