பக்கம் எண் :

 135. திருப்பராய்த்துறை1233


1444. வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே. 8

1445. விளங்கொண் மலர்மே லயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளம்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே. 9

_________________________________________________

பறியலூர் வீரட்டத்தில் விளங்கும் இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை உடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன், இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.

கு-ரை: நரை - வெண்மை.

8. பொ-ரை: பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களை உடையதும், மிகுதியான நெல்விளைவைத் தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர் வீரட்டானத்து இறைவன், வளைந்த பற்களையுடைய இராவணனைக் கயிலைமலையின்கண் அகப்படுத்தி அவனை வலிமை குன்றியவனாகும்படி கால்விரலால் அடர்த்து எழுந்தருளி இருப்பவனாவான்.

கு-ரை: வளைக்கும் எயிறு - கோரப்பல். அரக்கன் என்றது இராவணனை. ஏழை அன்னம் திளைக்கும் படுகர் - பெண்ணன்னம் புணரும் ஆற்றுப்படுகர்.

9. பொ-ரை: இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமையம்மையோடு இணைந்தும், இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும் விளங்குபவனாகிய திருப்பறியல்வீரட்டத்து இறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல்வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கிய மனத்தை யுடையவராய்த் தன்னைத் தொழத் தழல் உருவாய் நின்றவனாவான்.

கு-ரை: விளங்கு ஒண்மலர் - விளங்குகின்ற ஒளிபொருந்திய தாமரைமலர், ஓதவண்ணன் - கடல்வண்ணனாகிய திருமால். துளங்கும் - நடுங்கும். மனத்தார் என்றது அயனையும் மாலையும்.