135. திருப்பராய்த்துறை
பதிக வரலாறு:
திருக்கருவூர் ஆனிலையைப் போற்றி,
திருஞானசம்பந்தப் பிள்ளையார்
திருப்பராய்த்துறையை யடைந்தார்கள். அங்கே
நெற்றித் தனிக்கண்ணர் கோயிலை நண்ணிக்
கும்பிட்டுக் கோதில் தமிழ்ச்சொல் மாலையாகிய
‘நீறு சேர்வதொர்‘ என்னும் இப்பதிகத்தை அருளிச்
செய்தார்கள்.
பண்: மேகராகக்குறிஞ்சி
பதிக எண்: 135
திருச்சிற்றம்பலம்
1448. நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே. 1
149. கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல வடிகளே. 2
_________________________________________________
1. பொ-ரை: திருப்பராய்த்துறையில்,
கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர்,
திருநீறு அணிந்த திருமேனியை உடையவர்.
அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு
பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள்
தொடரத் தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய
பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர்.
கு-ரை: இப்பதிகம்,
திருப்பராய்த்துறைசேர் அண்ணல் நீறணிந்தவர்,
நேரிழைவைத்தவர், கொன்றையணிந்தவர், வேதர்,
வேதம் விரித்தவர் என அவரது பல இயல்புகளை எடுத்து
விளக்குவது. கூறு - மேனியில் ஒருபாதி. பாறு - பருந்து.
2. பொ-ரை: பசுமையான குளிர்ந்த
குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த
திருப்பராய்த்துறையில் விளங்கும்
அழிவற்றவராகிய
|