1450. வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற வொருவனார்
பாதிபெண்ணுரு வாவர்பராய்த்துறை
ஆதியாய வடிகளே. 3
1451. தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலுநெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழ லடிகளே. 4
1452. விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவினின்றெரி யாடுவர்
_________________________________________________
இறைவர், மணங்கமழும் சிறந்த
மலர்களும், கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல்
பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.
கு-ரை: அந்தமில்ல அடிகள் - தாம்
எல்லாவற்றிற்கும் அந்த மாதலேயன்றித் தமக்கு
அந்தம் இல்லாத அடிகள்.
3. பொ-ரை: திருப்பராய்த்துறையில்
எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய்
எழுந்தருளியுள்ள இறைவர், வேதங்களை அருளிச்
செய்தவர். எல்லா வேதங்களையும் முறையாக
விரித்துப் பொருள் விளக்கம் அருளிய
ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப்
பெண்ணுருவாக விளங்குபவர்.
கு-ரை: முறையால் விரித்து -
இன்னவேதத்தின்பின் இன்னது என முறைப்படி
விரித்து.
4. பொ-ரை: திருப்பராய்த்துறையில்
ஆலநீழலில் எழுந்தருளிப் பால், நெய் முதலியவற்றை
விரும்பி ஆடும் இறைவர், புலித்தோலைத் தம்
இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி பொருந்திய பூணூல்
அணிந்த மார்பினை உடையவர்.
கு-ரை: தோல் - புலித்தோல்.
5. பொ-ரை: திருப்பராய்த்துறையில்
பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர்,
திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப்
|