5. ஒருமைபெண்மையுடை
யன்சடையன்விடை
யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென
துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல்
கொள்ளமிதந்ததொர்
காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர
மாபுரமேவிய
பெம்மானிவனன்றே.
5
__________________________________________________
கு-ரை: விண்மகிழ்ந்தமதில்
- ஆகாயத்தில் பறத்தலை விரும்பிய மதில். இவை திரிபுராரிகளின்
பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டை. எய்தது -
மேருவை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கித் துளைத்தது.
உள்மகிழ்ந்து - மனமகிழ்ந்து, தேரிய - ஆராய, செய்யிய
என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மண் மகிழ்ந்த
அரவம் - புற்றினை விரும்பும் பாம்பு, இறைவன் அணிந்த
பாம்பு புற்றில் வாழாததாயினும் சாதி பற்றிக்
கூறப்பட்டது. அரவம் கொன்றை மலிந்த மார்பு - அச்சுறுத்தும்
விஷம் பொருந்திய பாம்பையும், மணமும் மென்மையும்
உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல்
வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும். பெண் - உமாதேவியார்.
பலிதேரவந்தார் எனதுள்ளம் கவர்ந்தார் என்றது என்னுடைய
பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார்
போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார்
என்பதை விளக்கியவாறு.
5. பொ-ரை: ஒரு திருமேனியிலேயே
உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும்,
சடைமுடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து
வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்
படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார
காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக் கொண்டபோது
தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில்
மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.
கு-ரை: ஒருமை - ஒரு திருமேனியிலேயே,
பெண்மை உடையன் - பெண் உருவத்தை உடையன்; என்றதால்
பெண்ணுருவும் ஆணுருவுமாகிய இருமையும் உடையன் என்பது
குறித்தவாறு. பெண்மை - பெண்ணுரு. உடையன் என்றதிலுள்ள
விகுதியால் ஆணுருவாயினும் பெண்மை உடைமையும், சிவம்
உடையானும் ஆம் என்றவாறு. சடையன் - பெண்மையுருவில்
பின்னிய சடையும்
|