13. காதிலங்குகுழை
யன்னிழைசேர்திரு
மார்பனனொருபாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு
மானின்னுரியாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ
மேவும்மிடஞ்சோலைப்
போதிலங்குநசை
யால்வரிவண்டிசை
பாடும்புகலூரே. 2
__________________________________________________
செறிந்த மலர்கள்மீது
புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும்
வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.
கு-ரை: குறி கலந்த இசை
- குறித்த சுரத்தானங்களோடு ஒன்றிய இசை, பாடலினான்
- இறைவன், மனக்குறிப்போடு ஒன்றிய இசையமைந்த பாடலினான்
என்பாரும் உளர். நசை - விருப்பம். நெறி - முறை, அஃதாவது
அவ்வவ்வான்மாக்களின் பருவநிலைக்கு ஏற்ப, விறகில்
தீயாகவும் பாலின்நெய்யாகவும் மணியுட்சோதியாகவும்
கலந்து நிற்கும் முறை, பலி - பிச்சை; முறி கலந்தது
ஒரு தோல் - கொன்ற புலியின் தோலை.
பொறி - வண்டு. உடையான்
இடம் புகலூர் என இயைக்க. இது பின்வரும் பாடற்கும்
இயையும்.
2. பொ-ரை: காதில்
விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய
மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன்.
யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன்.
அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், சோலைகளில்
தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும்
புகலூராகும்.
கு-ரை: ஒருபாகம் மாது
இலங்கும் திருமேனியன் என்பதால், காதிலங்கு குழையன்
என்பதற்குப் பெண்பாதியில் காதில் விளங்கும் குழையை
உடையவன் என்றும், ஆண்பாதியில் தளிரை உடையவன்
என்றும் பொருள்கொள்க. குழை - பனந்தோட்டால் செய்யப்படும்
மகளிர் காதணி; ஆடவர் காதில் செருகிக்கொள்ளும்
மணத்தழை; இதனை வடநூலார் ‘கர்ணாவதம்சம்‘ என்பர்.
இழைசேர் திருமார்பன் - பூணூல் சேர்ந்த, இழைத்த தங்க
அணிகள் சேர்ந்த மார்பினையுடை
|