காரின்மல்குகடல்
நஞ்சமதுண்ட
கடவுள்ளிடமென்பர்
ஊரின்மல்கிவளர்
செம்மையினாலுயர்
வெய்தும்புகலூரே. 4
16. செய்யமேனிவெளி
யபொடிப்பூசுவர்
சேரும்மடியார்மேல்
பையநின்றவினை
பாற்றுவர்போற்றிசைத்
தென்றும்பணிவாரை
மெய்யநின்றபெரு
மானுறையும்மிட
மென்பரருள்பேணிப்
பொய்யிலாதமனத்
தார்பிரியாது
பொருந்தும்புகலூரே.
5
__________________________________________________
வில்லாகக் கொண்டு
முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய
கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள்.
அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால்
உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும்
புகலூராகும்.
கு-ரை: அடையார் - (தேவர்க்குப்)
பகைவர். மலையைச் சிலையாக முனிந்தான் என்றது அவன்
முனிவொன்றுமே பகை தணித்து ஆட்கொண்டது; வில்லான
மலை அன்று என்பதாம், காரின் மல்கும் - கருமைநிறத்தில்
மிகுந்த, ஊரின் மல்கிவளர் செம்மையினால் உயர்வெய்தும்
புகலூர் - ஊர்களில் ஒருகாலைக்கு ஒருகால் நிறைந்து
வளரும் ஒழுக்கத்தாலுயர்ந்த புகலூர்.
5. பொ-ரை: சிவந்த திருமேனியில்
வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும்
அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர்.
என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர்.
அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப்
பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர்
என்பர்.
கு-ரை: அடியார்மேல் நின்றவினை
பையப் பாற்றுவார். பைய - மெதுவாக, நோயை விரைந்து
நீக்கினால் அதனால் விளையும் தீமை பெரிதாய், நோயின்
பெருமையும், மருத்துவன் உழைப்பும் அறியப்படாதவாறுபோல,
வினைகளை விரைந்து நீக்கின் விளையுங்
|