பக்கம் எண் :

340திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


95. மாசேறிய வுடலாரமண்

குழுக்கள்ளொடு தேரர்

தேசேறிய பாதம்வணங்

காமைத்தெரி யானூர்

தூசேறிய வல்குற்றுடி

யிடையார்துணை முலையார்

வீசேறிய புருவத்தவர்

வேணுபுர மதுவே. 10

__________________________________________________

தலையோட்டினை ஏந்தியவனுமாகிய சிவபிரானது ஊர்; ஆழ்ந்த நீர் நிலைகளில் வாழும் சங்குகள், கடல் தரும் உப்பங்கழியை விடுத்துச் செந்நெல் விளைந்த அகன்ற வயலில் வந்து உறங்கும் வேணுபுரமாகும்.

கு-ரை: வயம் - வையம் - போலி. வயம் உண் தவம் மாலும் - உலகை உண்ட தவத்தைச் செய்த திருமாலும். அடிகாணாது அலமாக்கும் - திருவடியைக் காணப் பெறாது சுழலும். அலமாக்கும் பரன் எனவும் ஏந்திய பரன் எனவும் தனித்தனியே கூட்டுக. பயன் ஆகிய பிரமன் - அச்சத்தை உடையவனாகிய பிரமன். கயம் - ஆழ்ந்த நீர்நிலை. சங்கம் உப்பங்கழியைவிட்டுச் செந்நெல் வயலில் வந்து உறங்கும் வேணுபுரம். செந்நெல்வியன் - செந்நெல் விளைந்துள்ள அகன்ற இடம்.

10. பொ-ரை: அழுக்கேறிய உடலினை உடையவர்களாகிய சமணர் கூட்டத்தினரோடு, புத்த மதத்தினராகிய தேரர்களும் ஒளி பொருந்திய திருவடிகளை வணங்காமையால் அவர்களால் அறியப் பெறாத சிவபிரானது ஊர்; அழகிய ஆடை தோயும் அல்குலையும், உடுக்கை போன்ற இடையையும், பருத்த தனங்களையும், ஆடவர் மேல் தம் குறிப்பு உணர்த்தி நெரியும் புருவங்களையும் உடைய அழகிய மகளிர் வாழும் வேணுபுரம் ஆகும்.

கு-ரை: மாசு ஏறிய உடல் - தேயாது தோய்வதால் அழுக்கு ஏறிய உடல். தேரர் - புத்த முனிவர். தேசு ஏறிய பாதம் - ஒளியுள்ள திருவடி. வணங்காமைத் தெரியான் - வணங்காதபடி அவர்களால் அறியமுடியாதவன். தூசு - ஆடை. துடி - உடுக்கை. வீசு ஏறிய புருவத்தவர் - ஆடவர்மேல் வீசி நெற்றியின்கண் ஏறிய புருவத்தினை உடையார்.