சிறையார்தரு களிவண்டறை
பொழில்சூழ்திரு வாலந்
துறையானவ னறையார்கழல்
தொழுமின்துதி செய்தே. 3
166. தணியார்மதி யரவின்னொடு
வைத்தானிட மொய்த்தெம்
பணியாயவ னடியார்தொழு
தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை
வயிரத்திர ளோடும்
அணியார்மண லணைகாவிரி
யாலந்துறை யதுவே. 4
__________________________________________________
குரியது, சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட
வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட ஆலந்துறையிலுள்ள
புள்ளமங்கை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச்
சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.
கு-ரை: கறை - விடம். மிடறு - கழுத்து.
பொறையார்தரு - சுமையாகப் பொருந்திய. நறை -
மணம்.
4. பொ-ரை: தண்ணிய பிறைமதியைப்
பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம்,
அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது
ஏத்துவதும், மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும்,
அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும்
காவிரியின் தென்கரையிலுள்ளதுமான ஆலந்துறையில்
அமைந்த புள்ளமங்கையாகும்.
கு-ரை: தணி ஆர் மதி - குளிர்ந்தபிறை.
இகரம் சாரியை. எம் பணி ஆயவன் - எமது தொண்டு
விளங்குதற்கு இடமாயவன். எம்மைப் பணிகொள்ளும்
தலைவனானவன் என்பாரும் உண்டு.
பொன்னும் மணியும் முதலாயின மணலில்
அணையும் காவிரி என்றது ஓடும் பொன்னும் ஒக்கநோக்கும்
இயல்பு காவிரிக்கு உண்டென்பதால் அடியாரியல்பு
விளக்கியவாறு.
|