பக்கம் எண் :

394திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



சிறையார்தரு களிவண்டறை

பொழில்சூழ்திரு வாலந்

துறையானவ னறையார்கழல்

தொழுமின்துதி செய்தே. 3

166. தணியார்மதி யரவின்னொடு

வைத்தானிட மொய்த்தெம்

பணியாயவ னடியார்தொழு

தேத்தும்புள மங்கை

மணியார்தரு கனகம்மவை

வயிரத்திர ளோடும்

அணியார்மண லணைகாவிரி

யாலந்துறை யதுவே. 4

__________________________________________________

குரியது, சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.

கு-ரை: கறை - விடம். மிடறு - கழுத்து. பொறையார்தரு - சுமையாகப் பொருந்திய. நறை - மணம்.

4. பொ-ரை: தண்ணிய பிறைமதியைப் பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம், அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது ஏத்துவதும், மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும், அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும் காவிரியின் தென்கரையிலுள்ளதுமான ஆலந்துறையில் அமைந்த புள்ளமங்கையாகும்.

கு-ரை: தணி ஆர் மதி - குளிர்ந்தபிறை. இகரம் சாரியை. எம் பணி ஆயவன் - எமது தொண்டு விளங்குதற்கு இடமாயவன். எம்மைப் பணிகொள்ளும் தலைவனானவன் என்பாரும் உண்டு.

பொன்னும் மணியும் முதலாயின மணலில் அணையும் காவிரி என்றது ஓடும் பொன்னும் ஒக்கநோக்கும் இயல்பு காவிரிக்கு உண்டென்பதால் அடியாரியல்பு விளக்கியவாறு.