பக்கம் எண் :

402திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



கோலம்மிகு மலர்மென்முலை

மடவார்மிகு குன்றில்

ஏலங்கமழ் பொழில்சூழ்தரும்

இடும்பாவன மிதுவே. 3

177. பொழிலார்தரு குலைவாழைக

ளெழிலார்திகழ் போழ்தில்

தொழிலான்மிகு தொண்டரவர்

தொழுதாடிய முன்றில்

குழலார்தரு மலர்மென்முலை

மடவார்மிகு குன்றில்

எழிலார்தரு மிறைவர்க்கிடம்

இடும்பாவன மிதுவே. 4

__________________________________________________

தலம், நிலப்பரப்பினும் மிக்க பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச் சான்றோர்களும், நற்குணங்களும் அழகும் மலர்போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும்.

கு-ரை: சீலம் - காட்சிக்கெளியனாந்தன்மை. இயமம் முதலான தவ ஒழுக்கங்களும் ஆம். ஒழுக்கம் என்றும் ஆம். சிந்தித்தெழும் எந்தை என்றது, ‘கொழுநற்றொழு தெழுவாள்‘ போல முனிவர்கள் சிந்தித்துக் கொண்டே எழுவர் என்பதாம். அன்றி ஒழுக்கம் மிக்க மனத்தை யுடையவர்களைத் திருவுள்ளத்தடைத்துத் திருவோலக்கம் கொண்டருளுகின்ற எந்தை. ஞாலம் மிகுகடல் - நிலத்தின் பரப்பைக் காட்டிலும் மிகுந்திருப்பதாகிய கடல். நிலப்பரப்புக் கால்பங்கும், நீர்ப்பரப்பு முக்கால்பங்கும் என்பது மரபாகலின். கோலம் - அழகு, நலமார் இடும்பாவனம் எனக்கூட்டுக. உலகத்தவர் நன்மையடைதற்கு (முத்தியின்பத்தை யடைதற்கு) இடமாகிய இடும்பாவனம்.

4. பொ-ரை: குலைகள் தள்ளிய வாழைகள் செழித்துள்ள பொழில்கள் சூழப் பெற்றதும், அழகு திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால் சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமான