பக்கம் எண் :

412திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



189. குழலின்னிசை வண்டின்னிசை

கண்டுகுயில் கூவும்

நிழலின்னெழில் தாழ்ந்தபொழில்

சூழ்ந்தநின்றி யூரில்

அழலின்வல னங்கையது

வேந்தியன லாடும்

கழலின்னொலி யாடும்புரி

கடவுள்களை கண்ணே. 5

_________________________________________________

சூடி, வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி, நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத் தொழுதல் அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.

கு-ரை: பூண்டவரை மார்பு - அணிகளைப்பூண்ட மலை போலத் திண்ணிய மார்பு. பூண்டவ்வரை - விரித்தல் விகாரம்.

ஈண்ட - செறிய. கொன்றை ஈண்ட மதி அதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திருநின்றி எனக் கூட்டுக. திருவடியைத் தொழுதாலல்லது அவர் அறிவான் அறியார் என ஆன்மாக்கள் அருளே கண்ணாகக் காணும் ஆற்றல் விளக்கியவாறு.

5. பொ-ரை: குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத் திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் களைகண் ஆவான்.

கு-ரை: பாடுவாரைப் பார்த்து மற்றவர்க்கும் பாடத் தோன்றுவதுபோலக் குழலிசையும் வண்டிசையும் கேட்டுக் குயில் கூவுகின்றன. நிழலின் எழில் தாழ்ந்த பொழில் - ஒளியும் நிழலும் விரவித் தோன்றும் நிலை சித்திரப்பூம்படாம் விரித்தது போலுமாகலின் நிழலின் எழில் தாழ்ந்த பொழில் என்பர்.

அழலின் வலன் - வலமாகச் சுற்றியெரியும் மழு. ஆடும்புரி கடவுள் - ஆடுகின்ற விரும்பத்தக்க கடவுள். களைகண் - நமக்கு ஆதாரம்.