திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்
தாதுநிலை யொன்றேழா மயிலையினிற்
பாணினியுஞ் சமழ்ப்ப வாக்கி
யேதுநுத லுபமான வளவெவையும்
பிரத்தியக்கத் தெய்தக் காட்டி
யோதுமுறை வேதமுமோ தாதுணர்ந்தே
முத்தியுமீங் குதவி யாண்ட
நாதனெழிற் பூந்தராய்க் கவுணியநா
யகன்பதங்கள் நயந்து வாழ்வாம்.
- மு.
சாமிநாதய்யர்.
ஆதிபுரி புராணம்
கும்பந்தன் னிடத்துதித்த முனிவரன்செந்
தமிழ்நாட்டிற் குண்டர் மாயை
கம்பந்தம் பின்செய்து கலதைதனின்
மயங்குகவு ரியன்மே லுற்ற
வெம்பந்த மிகுகூனும் வெப்பினொடு
நீக்கியொளிர் வெண்ணீறீந்த
சம்பந்தப் பெருமான்தன் சரணார
விந்தமலர் தலைமேற் கொள்வாம்.
- சுப்புராய
செட்டியார்.
|