216. சினமலி கரியுரி செய்தசிவ
னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை
தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின்
மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
இருநில னிடையினி தமர்வரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
பொதிபவர் - உடல் முழுவதும் போர்த்து
மூடும் புத்தர். சுரர்தரு நிகர் கொடையினர் -
கற்பக விருட்சத்தை யொத்த கொடையினையுடையவர்.
11. பொ-ரை: சினவேகத்தோடு வந்த
யானையை உரித்துப் போர்த்த சிவபிரான்
எழுந்தருளிய திருவீழிமிழலையை, மிக்க
செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர் வாழும்
சிவபுரநகரின் மன்னனும் தமிழ் விரகனுமாகிய
ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகப்
பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர்
அழகிய திருமகள், கலைமகள், சயமகள்,
அவர்க்கு இனமான புகழ் மகள் ஆகியோர் தம்பால்
பொருந்த, பெரிய இவ்வுலகின்கண் இனிதாக
வாழ்வர்.
கு-ரை: இது பயன்கூறித் திருக்கடைக்
காப்பருளுகிறது. தன மிகு மனர் - செல்வம்
மிகுந்த மனத்தை யுடையவர். சிரபுரம் - சீகாழி,
இப்பதிகத்தைப் பரிவொடு பயில்வார் திருமகள்
கலைமகள் வெற்றி மகள் புகழ்மகள் பொருந்தப்
பூமியில் நீடுவாழ்வார் என்பதாம்.
திருநெல்வேலிப் புராணம்
வரைவன வரதனை மகிழ்ந்து
பாடவே
பரையுமை திருமுலைப் பாலை யுண்டவர்
தரைபுகழ் ஞானசம் பந்தர் சண்பையார்
விரைமல ரடியிணை விரும்பிப் போற்றுவாம்.
- நெல்லையப்ப பிள்ளை.
|
|