பக்கம் எண் :

 25. திருச்செம்பொன்பள்ளி468


260. காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா விருப்பரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: நீர் வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்.

கு-ரை: காழிநாதனைப்பற்றி ஞானசம்பந்தன் சொன்னவைகளை உலகோர் புகழ உரைக்கவல்லவர்கள் வானத்து இனிதாய் இருப்பர் என்கின்றது. ஏர் - அழகு.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித்

திருமுன் நின்றே

அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட் டளையாக்கி

அவற்றுள் ஒன்று

விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட

மேவு காதல்

பொருத்தம்உற அருள்பெற்றுப் போற்றிஎடுத் தருளினார்

பூவார் கொன்றை.

- சேக்கிழார்.