பக்கம் எண் :

 25. திருச்செம்பொன்பள்ளி470


262. வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம்மீசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 2

263. வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா வூனமே. 3

264. மழுவா ளேந்தி மாதோர்பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய

__________________________________________________

2. பொ-ரை: கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய், சிறப்புப் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும்.

கு-ரை: இதுவுமது. சேராதவர் - இடைவிடாது தியானியாதவர். வினைகள் எனப்பன்மையாற் கூறியது வெடிக்கும் வினைகளாய் இருத்தலின்.

3. பொ-ரை: மலைகளில் செழித்து வளர்ந்த சந்தன மரங்களோடு, அகில் மரங்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா.

கு-ரை: செம்பொன்பள்ளி நம்பனைத் தோத்திரியாதவர் மேலுள்ள ஊனம் ஒழியாதென்கின்றது. வரை - மலை. நரை - வெள்ளை. உரையாதவர் - புகழாதவர்.

4. பொ-ரை: மழுவாகிய வாளை ஏந்தி உமையொரு பாகனாய் வளம் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை.