பக்கம் எண் :

 26. திருப்புத்தூர்474


271. நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன் பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.

கு-ரை: செம்பொன்பள்ளியில் மேவிய இறைவனைப் பெறுதற்காக ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் சொல்லுவார் ஓங்கி வாழ்வர். நறவு - தேன். செறுஆர் - வயல்கள் பொருந்திய உறுமா சொல்ல - உள்ளத்துப் பொருந்தும்படி சொல்ல.

சூதசங்கிதை

காழிநெடு வரையுதித்துக் கருதரிய

சிவஞானக் கதிர்கள் வீசி

வாழிபரம் பொருட்டுருவ னருட்கயிற்றிற்

பிணிப்புண்டு வளரஞ் ஞானப்

பாழிமிகு பொய்ச்சமணக் குருட்டிருள்கெட்

டுடைந்தோடப் பாற்றி நீற்றன்

பாழியதா மரைமலர்த்தி விளங்கியநல்

லிளங்கதிரை யகத்துள் வைப்பாம்.

- தேராஜபிள்ளை.