பக்கம் எண் :

475திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


26. திருப்புத்தூர்

பதிக வரலாறு:

பாண்டிநாட்டுப் பதிகள் பலவற்றையும் வணங்கத் திருவுளங்கொண்ட பிள்ளையார் அணியாப்பனூர் அணைந்து, பணிந்து பாடியபின் ஏறணிந்த வெல்கொடியார் வீற்றிருந்தருளும் திருப்புத்தூரையடைந்து சிலநாள் வீற்றிருந்தார்கள். அப்போது ‘வெங்கள் விம்மு‘ என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.

பண் : தக்கராகம்

பதிக எண்: 26

திருச்சிற்றம்பலம்

272. வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையு மிறையாரே. 1

273. வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்

__________________________________________________

1. பொ-ரை: விரும்பத்தக்க தேன் விம்மிச் சுரந்துள்ள, மணம் பொருந்திய சோலைகள் வானளாவ உயர்ந்து, அங்குத் தவழும் திங்களோடு பழகித் திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடைமுடியினராகிய பெருமானார் எங்கள் சிரங்களின்மேல் தங்கும் இறைவர் ஆவார்.

கு-ரை: எங்கள் சிரமேல் தங்கிய இறைவன் திருப்புத்தூர் நாதன் என்கின்றது. வெம் கள் - விரும்பத்தக்கதேன். வெறி - மணம். கள்ளுண்ட வெறியால் சோலை தனக்குத் தகாத திங்களோடு திளைக்கின்றதென்று வேறும் ஒரு பொருள் தோன்ற நின்றது காண்க. உச்சி - தலை.

2. பொ-ரை: தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பன்றி வடிவமெடுத்த திருமால் உலகை அழிக்கத் தொடங்கிய காலத்து,