ஊனமின்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளு மெயிறும் புனைவாரே. 2
274. பாங்கு நல்ல வரிவண்
டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயி லுறைவா ரவர்போலும்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. 3
275. நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
__________________________________________________
அதனை அடக்கி, அதன் பல்லையும் கொம்பையும்
பறித்துத் தன் மார்பில் அணிந்தவர், வேனிற் காலத்தில்
வெளிப்படும் மணம் நிறைந்துள்ள
பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் வண்டுகள் தேனை
உண்டு திளைத்து ஒலி செய்யும் திருப்புத்தூரில் குறையின்றி
உறையும் பெருமானார் ஆவர்.
கு-ரை: இது இறைவன் பன்றியின்
முள்ளையும் பல்லையும் புனைபவர் என்கின்றது. வேனல்
- வேனிற்காலம். வண்டு தேன் இவை வண்டின் வகைகள்.
ஊனம் - குறைபாடு. ஏனம் - ஆதிவராகம். ஆதிவராகம்
செருக்குற்று உலகத்தை அழிக்கத் தொடங்கிய காலத்துத்
தேவர்கள் வேண்டுகோட்கிரங்கி, அதை அடக்கி,
அதனுடைய முள்ளையும், பல்லையும் மார்பில் அணிந்தார்
என்பது வரலாறு.
3. பொ-ரை: தம்மை அடைக்கலமாக அடைந்த
திங்கள் தவழும் செந்நிறச் சடைமுடியினை
உடைய இறைவர், நல்ல வரிகளை உடைய வண்டுகள்
பாங்கரிலிருந்து இசைபாடத் தேன் நிறைந்த
கொன்றை மலர்கள் முடிமிசைத் திளைத்து விளங்கத்
திருப்புத்தூரில் ஓங்கி உயர்ந்த கோயிலில் எழுந்தருளிய
பெருமானார் ஆவார். கொன்றை - திருப்புத்தூர்
தல விருட்சம்.
கு-ரை: இது திங்கள் திகழும் சடையார் திருப்புத்தூர்
நாதர் என்கின்றது. வரிவண்டு இசைபாட, கொன்றை திளைக்கும்
திருப்புத்தூர் எனக் கூட்டுக. பாங்கு - பக்கங்களில்.
4. பொ-ரை: ஆன் ஏற்றுக் கொடியைத் தனதாகக்
கொண்ட எம் இறைவர், மணம் வீசுமாறு மலர்ந்த சிறந்த
நறுமலர்களைத் தம் வாயால்
|