பக்கம் எண் :

477திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே. 4

276. இசைவி ளங்கு மெழில்சூழ்ந் தியல்பாகத்
திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும்
வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே. 5

277. வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த வொளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. 6

__________________________________________________

கவ்வி வண்டுகள் தேனை உண்டு திளைக்கும் திருப்புத்தூரில் பலகாலம் தங்கிய வாழ்க்கையினை உடையவர் ஆவார்.

கு-ரை: நாற - மணம்வீச. விண்ட - மலர்ந்த. வண்டுமலர் கவ்வித் தேறல் திளைக்கும் திருப்புத்தூர் என்க. ஊறல் வாழ்க்கை - ஊறிப்போன வாழ்க்கை.

5. பொ-ரை: கங்கையாகிய பெண் விளங்கும் அழகிய சென்னியினராகிய இறைவர், புகழால் விளக்கம் பெற்றதும், இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும், நாற்றிசைகளிலும் பொழில்கள் சூழ்ந்ததுமான திருப்புத்தூரில், தம்மை வழிபடுவார்க்கு அன்பு வளருமாறு பழகும் பெருமானார் ஆவார்.

கு-ரை: இசை - புகழ். பசை . அன்பு. படித்தார் - பழகுபவர். வசை - பெண்; ஈண்டு கங்கை. வடி - அழகு. நுதல் - சென்னி. "குடுமி களைந்த நுதல்" என்ற புறப்பகுதியும் இப்பொருளதாதல் ஓர்க.

6. பொ-ரை: வெண்மை நிறமுடைய விடை உருவம் எழுதிய கொடியை உடைய இறைவர், வெள்ளிய நிறமுடையனவாய் மணம் பொருந்திய மலர்களை அடித்துக் கொண்டு தெளிந்த தன்மை உடையதாய்த் தண்ணீர் பாயும் திருப்புத்தூரில் எழுந்தருளிய ஒண்மை பொருந்திய ஒளியை உடைய பெருமானார் ஆவார்.