பக்கம் எண் :

484திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


289. பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற வடிக ளவர்போலும்
கூர நின்ற வெயின்மூன் றெரித்தாரே. 7

290. மலைய தனா ருடைய மதின்மூன்றும்
சிலைய தனா வெரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர் வல்ல வரக்கன் றருக்கினை
மலைய தனா லடர்த்து மகிழ்ந்தாரே. 8

__________________________________________________

நிற்கும் வயல்களாலும் சூழப்பெற்ற திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார்.

கு-ரை: அழகன் சடையில் வெண்பிறை யுடையார்போலும் என்கின்றது. கழுநீர் வயல்களும், செந்நெல் வயல்களும் சூழ்ந்த புன்கூர் என்க. பொருந்தி - தமக்கு இதுவே சிறந்த தலம் என அமைந்து.

7. பொ-ரை: கொடியனவாய்த் தோன்றி இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த இறைவர், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித் தொழுதேத்துமாறு தேரோடும் திருவீதிகளை உடையதும், எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து திகழ்வதுமான திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாவார்.

கு-ரை: தேர்விழாத்திகழும் திருப்புன்கூர் அடிகள் முப்புரம் எரித்த முதல்வன்போலும் என்கின்றது. பார், விண் - ஆகு பெயராக முறையே மக்களையும் தேவரையும் உணர்த்தின. ஆர - பொருந்த. கூரம் - க்ரூரம், கொடுமை.

8. பொ-ரை: வலிமை பொருந்திய இராவணன் செருக்கைப் போக்க, அவனைக் கயிலை மலையாலே அடர்த்துப்பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் வழங்கிய இறைவர், தேவர்களோடு சண்டையிட்டு அவர்களை அழிக்கும் குணம் உடையவராய அசுரர்களின் முப்புரங்களை வில்லால் எரித்தழித்தவராகிய திருப்புன்கூர்த் தலைவர் ஆவார்.

கு-ரை: புரமெரித்த வீரத்தையும், இராவணன் வலியடக்கியாண்ட கருணையையும் விளக்குகின்றது. மலையதனார் - மலைதற்