மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே.
4
298. பிறையு மரவும் புனலுஞ்
சடைவைத்து
மறையு மோதி மயான மிடமாக
உறையுஞ் செல்வ முடையார் காவிரி
அறையுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.
5
299. துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல்பயின்றாடும்
அடிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே.
6
__________________________________________________
ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த
எண்ணும் அறிவுடையவர்களே, துணித்தலைச் செய்வதும்,
போர் செய்தற்கு உரியதுமான விளங்கும் மழுவாயுதத்தைக்
கையில் ஏந்தியவரும், நீலமணி போன்ற கண்டத்தை
உடையவருமான, சிவபெருமான் மேவிய நீண்ட
பொழில்கள் சூழ்ந்த அழகிய திருச்சோற்றுத்துறையைச்
சென்றடைவோமாக.
கு-ரை: பிணிகொள் ஆக்கை - நோயுற்ற
உடல். பிறப்புளீர் - நோயுற்ற இவ்வுடல் ஒழிக்க
எடுத்த இப்பிறவியைப் பயன்படுத்தும் ஞானிகளே!
5. பொ-ரை: இளம் பிறையையும்
பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து, நான்மறைகளை
ஓதிக் கொண்டு, சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு
உறையும், வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின்
காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச்
சென்றடைவோம்.
கு-ரை: அணியல்லாத பாம்பு மதி இவற்றைப்
பூண்டு, கரிகாடு இடமாகக்கொண்டும் செல்வமுடையார்
என்றது சுவைபடக் கூறியது. அறையும் - மோதும்.
6. பொ-ரை: உடுக்கைகள் பலவற்றோடு
முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்
பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக்
கொண்டு, பொருத்தமான தாளச் சதிகளோடு பாடல்கள்
|