322. கறுத்தான் கனலான் மதின்மூன்
றையும்வேவச்
செறுத்தான் றிகழுங் கடனஞ் சமுதாக
அறுத்தா னயன்றன் சிரமைந் திலுமொன்றைப்
பொறுத்தா னிடம்பூம் புகலிந் நகர்தானே.
7
323. தொழிலான் மிகுதொண்
டர்கள்தோத் திரஞ்சொல்ல
எழிலார் வரையா லன்றரக் கனைச்செற்ற
கழலா னுறையும் மிடங்கண் டல்கண்மிண்டிப்
பொழிலான் மலிபூம் புகலிந் நகர்தானே.
8
__________________________________________________
7. பொ-ரை: மும்மதில்களும் கனலால்
வெந்தழியுமாறு சினந்தவனும், கடலிடை விளங்கித் தோன்றிய
நஞ்சை அமுதாக உண்டு கண்டத்தில் தரித்தவனும், பிரமனது
ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்து அதனைக் கையில் தாங்கிய
சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய புகலி நகராகும்.
கு-ரை: புரம் எரித்து, நஞ்சுண்டு, பிரமன்
சிரங்கொய்து வீரம் விளக்கிய தலைவன் பதி புகலி
என்கின்றது. இப்பாட்டு அடி தோறும் பொருள்முற்றி
வந்துள்ளது.
கறுத்தான் - சினந்தவன். செறுத்தான் -
கண்டத்தில் அடக்கியவன். வேவக் கறுத்தான், அமுதாகச்
செறுத்தான். ஒன்றையறுத்தான், அதைப் பொறுத்தான்
இடம் புகலி என முடிவு செய்க.
8. பொ-ரை: தாம் செய்யும் பணிகளால்
மேம்பட்ட தொண்டர்கள் தோத்திரம் சொல்லிப்
போற்ற, அழகிய கயிலைமலையால் முன்னொரு காலத்தில்
இராவணனைச் செற்ற திருவடிகளை உடைய சிவபிரான்
உறையும் இடம், தாழைமரங்கள் செறிந்து விளங்கும்
பொழில்கள் சூழ்ந்த புகலி நகராகும்.
கு-ரை: தொண்டர் தோத்திரஞ்சொல்ல
இராவணனைச் செற்ற திருவடியையுடைய சிவன்பதி புகலி
என்கிறது.
தொழிலால் மிகு தொண்டர்கள் - சரியை,
கிரியையாதிகளால் மிக்க அடியார்கள். எழில் -
எழுச்சி; அழகுமாம். கண்டல் - தாழை.
|