332. பலவும் பயனுள் ளனபற்
றுமொழிந்தோம்
கலவும் மயில்கா முறுபே டையொடாடிக்
குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டம்
நிலவும் பெருமா னடிநித் தல்நினைந்தே.
6
333. மாடார் மலர்க்கொன் றைவளர்
சடைவைத்துத்
தோடார் குழைதா னொருகால திலிலங்கக்
கூடார் மதிலெய் துகுரங் கணின்முட்டத்
தாடா ரரவம் மரையார்த் தமர்வானே. 7
__________________________________________________
இனிக்குறையக்கூடாத அளவு குறைந்த பிறைமதி.
ஒண்சுடரான் - ஒள்ளிய சோதிவடிவன்.
6. பொ-ரை: தோகைகளை உடைய ஆண் மயில்கள்
தாம் விரும்பும் பெண் மயில்களோடு கூடிக் களித்தாடும்
பொழில்களால் சூழப்பட்ட குரங்கணில்முட்டத்தில்
உறையும் பெருமான் திருவடிகளை நாள்தோறும் நினைந்து
உலகப் பொருள்கள் பலவற்றிலும் இருந்த பற்றொழிந்தோம்.
கு-ரை: இது இறைவனடியை நித்தலும் நினைந்ததன்
பயன் உள்ள பலவற்றிலும் இருந்த பற்றும் ஒழிந்தோம்
என்கின்றது. பயன் உள்ளன - பொறிகட்கும் பிறவற்றிற்கும்
பயன்படுவனவாகிய தனுகரண புவனபோகங்கள். கலவம் - தோகை.
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக
பற்று விடற்கு‘ என்ற குறட்கருத்து அமைந்திருத்தல்
காண்க.
7. பொ-ரை: சிவபிரான் பொன்னையொத்த
கொன்றை மலர் மாலையைச் சடைமீது அணிந்து, காதணியாகிய
குழை ஒரு காதில் இலங்கத் திரிபுரத்தை எரித்தழித்து,
ஆடும் பாம்பை இடையிலே வரிந்துகட்டிக் குரங்கணில்முட்டத்தில்
எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: கொன்றையணிந்து குழையுந்தோடுங்
காதில் தாழ, திரிபுரமெரித்த பெருமான் குரங்கணில்
முட்டத்து அமர்வான் என இறைவனுடைய மாலை அணி வீரம்
இவற்றைக் குறிப்பிக்கின்றது. மாடு ஆர்மலர்க்
கொன்றை - பொன்னை ஒத்த நிறமுடைய கொன்றைமலர்.
கூடார் - பகைவர். ஆடு ஆர் அரவம் - ஆடுதலைப் பொருந்திய
அரவம்.
|