334. மையார் நிறமே னியரக்
கர்தங்கோனை
உய்யா வகையா லடர்த்தின் னருள்செய்த
கொய்யார் மலர்சூ டிகுரங் கணின்முட்டம்
கையாற் றொழுவார் வினைகாண் டலரிதே.
8
335. வெறியார் மலர்த்தா
மரையா
னொடுமாலும்
அறியா தசைந்தேத் தவோரா ரழலாகும்
குறியா னிமிர்ந்தான் றன்குரங் கணின்முட்டம்
நெறியாற் றொழுவார் வினைநிற் ககிலாவே.
9
__________________________________________________
8. பொ-ரை: கரிய மேனியை உடைய அரக்கர்
தலைவனாகிய இராவணனைப் பிழைக்க முடியாதபடி அடர்த்துப்
பின் அவனுக்கு இனிய அருளை வழங்கியவனும், அடியவர்
கொய்தணிவித்த மலர் மாலைகளுடன் குரங்கணில்முட்டத்தில்
எழுந்தருளியுள்ளவனுமாகிய சிவபெருமானைக் கைகளால்
தொழுபவர் வினைப்பயன்களைக் காணுதல் இலராவர்.
கு-ரை: இத்தலத்தைத் தொழுவார்
வினைகாண்டல் அரிது என்கின்றது.
மையார்மேனி - கரியமேனி. அரக்கன் -
இராவணன். உய்யா வகையால் - தப்பாதவண்ணம். கொய்
ஆர் மலர் - கொய்தலைப் பொருந்திய மலர். வினை -
வினைப்பயனாகிய துன்ப இன்பங்களை.
9. பொ-ரை: மணம் கமழும் தாமரை மலரில்
உறையும் நான்முகனும், திருமாலும் அடிமுடி அறிய முடியாது
வருந்தி வணங்க அழல் உருவாய் ஓங்கி நின்றருளிய சிவபிரான்
விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக வணங்குவார்
வினைகள் இலராவர்.
கு-ரை: இது தொழுவார்வினை நிற்கும்
ஆற்றல் இல்லாதன என்கின்றது.
வெறி - மணம். அறியாது அசைந்து - முதற்கண்
இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து. ஏத்த
- பின்னர் அறிந்து துதிக்க. ஓர் ஆர் அழலாகம்
குறியான் - ஒப்பற்ற நெருங்குதற்கரிய அழலாகிய திருவுருவையுடையவன்.
நெறி - ஆகமவிதி.
|