பக்கம் எண் :

548திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


409. தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே. 6

410. அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும்ம புரிநூ லர்கள்கூடிச்
வணங்கும் மயிலா டுதுறையே. 7

411. சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொண் மயிலா டுதுறையே. 8

__________________________________________________

6. பொ-ரை: தொண்டர்களாயுள்ளவர்கள் கூடிஇசை பாடியும், தரிசித்தும் துதிக்கும் சிவபெருமானது ஊர் முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள் வேதங்களை ஓதித் துதிக்க, வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாகும்.

கு-ரை: தொண்டர்கள் கூடித் துதிபாடும் ஊர் என்கிறது. துதிசெய்பவன் - துதிசெய்யப்படுமவன். பண்டும் - முன்பும்.

7. பொ-ரை: உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள் புரிபவன் ஊர், முப்புரிநூல் துவளும் அந்தணர்கள் கூடி வணங்கும் திருமயிலாடுதுறை ஆகும்.

கு-ரை: இது மயிலம்மையை ஒருபாகங்கொண்டு அருள் செய்த ஊர் என்கின்றது. அணங்கு - மயிலம்மை. இணங்கி - பொருந்தி. நுணங்கும் - துவளும். புரிநூலவர்கள் - முப்புரி நூலையுடைய அந்தணர்கள்.

8. பொ-ரை: பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலர் இல்லங்களிலும் சென்று இரந்த மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனை நெரியுமாறு அடர்த்த நன்மை யாளனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.