பக்கம் எண் :

 43. திருக்கற்குடி583


படையார் சூலம் வல்லவன் பாதம்

பரவிய பத்திவை வல்லார்

உடையா ராகி உள்ளமு மொன்றி

உலகினின் மன்னுவர் தாமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

பத்தையும் ஓதுபவர், எல்லா நன்மைகளும் உடையவராய் மனம் ஒன்றி உலகில் நிலையான வாழ்வினைப் பெறுவர்.

கு-ரை: இப்பதிகம் வல்லவர் எல்லா வளமும் உடையவராகி மன ஒருமைப்பாட்டுடன் வாழ்வார் என்கின்றது. கடை - வாயில். மன்னுவர் - வினைப்போகத்திற்கு உரிய காலம்வரையில் பூதவுடலோடும், அதற்குப்பின் புகழுடலோடும் நிலைபெறுவர்.

உறையூர்ப் புராணம்

பால்மணக்குஞ் செவ்வாயுந் தேன்மணக்கும்

பங்கயப்பூம் பைந்தா ரோடு

நூல்மணக்குந் திருமார்பு மருண்மணக்கு

மிருவிழியு நூறை யோடு

சேல்மணக்கும் வாயற்காழித் திருஞான

சம்பந்தத் தேவ னின்பச்

சால்மணக்கு மலரடியு முள்ளுவாம்

வினையனைத்துந் தள்ளு வாமே.

- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

மாயூரப் புராணம்

தமரொடு வெள்ள நீந்தத் தவமுயன் றெழுநா ளாற்றி
அமர்கொடுங் கணையொன் றுய்த்து வருந்துமா லவன் போலாது
தமரொடு வெள்ள நீந்த நாவாய்க்கட் டவிழ்த்துத் தாவா
தாமரொரு பதிகஞ் செவ்வாய் மலர்ந்தவர்க் கடிமை செய்வாம்.

- தியாகராசப்பக் கவிராயர்.