பக்கம் எண் :

584திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


43. திருக்கற்குடி

பதிக வரலாறு:

திருப்பராய்த்துறையை வழிபட்டு வந்தருள்கின்ற காழிப் பிள்ளையார், திருக்கற்குடி மலையை அடைந்தார்கள். அம்மலைமேல் எழுந்தருளியுள்ள கனகக்கொழுந்தை - திரிபுரம் எரித்த வீரரை - விடையாளியைப் போற்றி ‘வடந்திகழ்‘ என்னும் இப்பதிகத்தையருளிச் செய்தார்கள்.

பண் : தக்கராகம்

பதிக எண்: 43

திருச்சிற்றம்பலம்

459. வடந்திகழ் மென்முலை யாளைப்

பாகம தாக மதித்துத்

தடந்திரை சேர்புனன் மாதைத்

தாழ்சடை வைத்த சதுரர்

இடந்திகழ் முப்புரி நூலர்

துன்பமொ டின்பம தெல்லாம்

கடந்தவர் காதலில் வாழுங்

கற்குடி மாமலை யாரே. 1

__________________________________________________

1. பொ-ரை: திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத்துள்ள சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்ப துன்பங்களைக் கடந்தவர்.

கு-ரை: ஒருமாதை முடியிலும், ஒருமாதைப் பாகத்திலும் வைத்தும், பிரமசாரியாயிருப்பவர் கற்குடியார் என்கின்றது. முப்புரி நூலர் என்றது ‘பவன் பிரமசாரியாகும்‘ என்பதை விளக்க. வினையின் நீங்கிய முதல்வனாதலின், வினைபற்றி நிகழ்வனவாகிய துன்ப இன்பங்கள் அவரைப் பாதியா என்பது விளக்கக் ‘கடந்தவர்‘ என்றார்.

குருவருள்: "துன்பமொடு இன்பம தெல்லாம் கடந்தவர் காதலில்