488. கணையும்வரிசிலையு மெரியுங்கூடிக்
கவர்ந்துண்ண
இணையிலெயின்மூன்று
மெரித்திட்டாரெம்
மிறைவனார்
பிணையுஞ்சிறுமறியுங் கலையுமெல்லாங்
கங்குல்சேர்ந்
தணையும்பழையனூ ராலங்காட்டெம்
அடிகளே. 8
489. கவிழமலைதரளக் கடகக்கையா
லெடுத்தான்தோள்
பவழநுனைவிரலாற் பையவூன்றிப்
பரிந்தாரும்
__________________________________________________
வாழ்த்துக்களைக் கேட்டு தெய்வத் தன்மை
மிகுந்து தோன்றும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு
எம் அடிகள் ஆவார்.
கு-ரை: உமையொரு கூறனாக,
இருவேறுருவின் ஓருபேரியாக் கையனாக எழுந்தருளிய
பெருமான் இவர் என்கின்றது. இரு கூறு - சத்தியின்கூறும்
சிவத்தின்கூறும் ஆகிய இரண்டு கூறு, வைகல் - நாடோறும்.
அணங்கும் - தெய்வத்தன்மை மிகும்.
8. பொ-ரை: அம்பு வில் நெருப்பு ஆகியன
கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய
எம் இறைவர். பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள்
ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த
ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
கு-ரை: முப்புரங்களை வில்லும் அம்பும்
தீயும்கூடி எரிக்கச் செய்த இறைவன் இவர் என்கின்றது.
இணை - ஒப்பு - பிணை - பெண்மான். மறி - மான்குட்டி.
கலை - ஆண்மான். கங்குல் - இரா.
9. பொ-ரை: கயிலை மலை நிலை குலையுமாறு
முத்துக்கள் பதித்த வீரக் கடகம் அணிந்த தன் கைகளால்
எடுத்த இராவணனின் தோள் வலியைத் தம் பவழம்
போன்ற கால்விரல் நுனியால் மெல்ல ஊன்றி அடர்த்துப்
பின் அவனுக்கு இரங்கி அருள் புரிந்த சிவபுரானார்.
|