பக்கம் எண் :

 46. திருவதிகைவீரட்டானம்615


496. எண்ணா ரெயிலெய்தா னிறைவ னனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரம னதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. 4

497. கரிபுன் புறமாய கழிந்தா ரிடுகாட்டில்
திருநின் றொருகையாற் றிருவா மதிகையுள்
எரியேந் தியபெருமா னெரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. 5

498. துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாய லுமையோ டிசைபாடி

_______________________________________________

4. பொ-ரை: பகைவரது திரிபுரங்களை எய்து அழித்த இறைவன் அனலைக் கையில் ஏந்தி மார்ச்சனை இடப்பட்ட முழவு முழங்க இளம் பிறையை முடியில் சூடிப் பண்ணமைப்புடைய வேதங்களை அந்தணர் ஓதத்திருவதிகை வீரட்டானத்தே தேவர்கள் போற்ற நின்று ஆடுவான்.

கு-ரை: பகைவரது திரிபுரத்தை எரித்தருளிய இறைவர் அனலேந்தி, மதிசூடி, மறைபாட அதிகை வீரட்டானத்து ஆடுவர் என்கின்றது. எண்ணார் - பகைவர். மண் - மார்ச்சனை. முதிரா மதி - இளம் பிறை.

5. பொ-ரை: கரிந்த புல்லிய ஊர்ப்புறமாய இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில், ஒரு திருக்கரத்தில் எரி ஏந்தி ஆடும் பெருமான் திருமகள் நிலைபெற்ற திருவதிகையில் உள்ள வீரட்டானத்தில் எரி போன்று சிவந்த தன் சடைகள் தாழ்ந்து விரிய தலையில் கங்கை சூடி ஆடுவான்.

கு-ரை: எரியேந்திய பெருமான் சடைதாழப் புனல்சூடி இடுகாட்டில் ஆடுவார் என்கின்றது. கரி புன்புறம் ஆய - கரிந்த புல்லிய ஊர்ப்புறமாகிய. திரு நின்று - திருமகள் நிலைபெற்று, ஒருகையால் - ஒழிதலால்: அஃதாவது பிற இடங்கட்குச் செல்லுதலை ஒழிதலால். இது திருஅதிகை என்பதற்குப் பொருள் காட்டியவாறு.

6. பொ-ரை: அசைந்து எரியும் அனலை அழகிய கையில் பொருந்த ஏந்தி விளையாடி, இளங்கொம்பு போன்ற உமையம்மை