பக்கம் எண் :

 48. திருச்சேய்ஞலூர்627


516. நீறடைந்த மேனியின்க

ணேரிழை யாளொருபால்

கூறடைந்த கொள்கையன்றிக்

கோல வளர்சடைமேல்

ஆறடைந்த திங்கள்சூடி

யரவம ணிந்ததென்னே

சேறடைந்த தண்கழனிச்

சேய்ஞலூர் மேயவனே. 2

517. ஊனடைந்த வெண்டலையி

னோடுப லிதிரிந்து

கானடைந்த பேய்களோடு

பூதங்க லந்துடனே

கு-ரை: பலநூல் கற்றும் மயக்கந்தெளியாமையாலே வந்து கேட்ட சனகாதியர் நால்வர்க்கும் உபதேசப்பொருளை உரைத்த தென்னே என வினாவியதாக அமைந்தது இப்பாடலும் பிறவும். நூல் - வேதாகம முதலிய நூற்பிரமாணங்கள். மால் - மயக்கம். நால்வர் - சனகாதியர் நால்வர். அரு மறை - அரிய அநுபூதி நிலையாகிய இரகசியத்தை.

2. பொ-ரை: சேறு மிகுந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! திருநீறணிந்த தன் திருமேனியின்கண் உமையம்மை ஒருபால் விளங்க அழகியதாய் நீண்டு வளர்ந்த சடைமேல் கங்கையையும் தன்னைச் சரணாக அடைந்த திங்களையும் சூடிப் பாம்பையும் அணிந்துள்ள காரணம் யாதோ?

கு-ரை: ஒருபாகமாக உமையைக் கொண்டிருத்தலே யன்றிக் கங்கை முதலியவற்றையும் அணிந்ததென்னே என்கின்றது. கோலம் - அழகு. பெண்ணொருபாதியராக இருந்தும், மற்றொரு பெண்ணாகிய கங்கையையும், காமத்தாற் கலைகுறைந்த மதியையும், போகியாகிய பாம்பையும் அணிதல் ஆகுமா என வினாவியதன் நயம் ஓர்க.

3. பொ-ரை: வண்டுகள் நிறைந்த சோலைகள் செறிந்த திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! ஊன்பொருந்திய வெண்மையான தலையோட்டைக் கையில் ஏந்தி, உண் பலிக்குத் திரிந்து காட்டில்