மானடைந்த நோக்கிகாண
மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு
சேய்ஞலூர் மேயவனே. 3
518. வீணடைந்த மும்மதிலும்
வின்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தா
னல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும்
பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடமல்கு
சேய்ஞலூர் மேயவனே. 4
வாழும் பேய்களோடு பூதகணங்களும் கலந்து
சூழ, மான் போன்ற கண்ணை உடைய உமையம்மை காண மகிழ்வோடு
இடுகாட்டில் எரியாடுவது ஏன்?
கு-ரை: பலியேற்று, பேயும் பூதங்களும்
புடைசூழ, மலையரசன் மகள் காண எரியாடுதல் ஏன் எனவினவுவதை
விளக்குகிறது. கான் - காடு. மான் அடைந்த நோக்கி -
மான் பார்வையைக் கற்றுக் கொள்வதற்காக வந்தடைந்த
நோக்கினையுடையாளாகிய உமாதேவி.
4. பொ-ரை: பண்ணிசையோடு வண்டுகள்
பாடும் பசுமையான பொழில் சூழ்ந்ததும், அழகியதாய்
உயர்ந்த மாட வீடுகள் நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில்
எழுந்தருளிய இறைவனே! மும்மதில்களும் வீணடையுமாறு
மலையை வில்லாகவும் அரவை அவ்வில்லின் நாணாகவும்
கொண்டு கொடிய அம்பால் பெரிய எரியை அம்முப்புரங்களுக்கு
ஊட்டியது ஏன்?
கு-ரை: மலை வில்லாக, பாம்பு நாணாகக்
கொண்டு முப்புரத்தைத் தீவைத்தது என்னே எனவினாவுகிறது
இத்திருப்பாடல். வீண் அடைந்த - பயனற்றுப்போன,
நல்லெரி என்றது பூத எரிபோலாது, புண்ணியப்
பொருளாகிய சிவபெருமானுடைய சிரிப்பினின்றெழுந்த
சிவாக்கினி என்பதைக் குறிப்பித்தது. பாண் - பாட்டு.
சேண் - ஆகாயம்.
|