ஓசை. சிவபெருமான் கழலின் ஓசை.
மகா காளியின் சிலம்பின் ஓசை.
2-10. செய்தவத்தர் - தவத்தைச் செய்யும்
அடியார்கள். செய்த + அவத்தர் - தவம் என்று
வீண் காரியம் விளைக்கும் தேரர்.
26-10. ஆறும் நான்கும் அமர்ந்தார் -
வேதாங்கங்கள் ஆறினையும் வேதம் நான்கினையும்
விரும்பியவர். ஆறாறாக அடுக்கப்பட்டு
வருகின்ற அகம், அகப்புறம், புறம்,
புறப்புறம் ஆகிய சமயங்களின் பொருளாய் அமர்ந்திருப்பவர்.
26-11. சேடர் - எல்லாம் தத்தம் காரணத்துள்
ஒடுங்க அவை தமக்குள் ஒடுங்கத் தாம் ஒன்றினும் ஒடுங்காது,
ஒடுங்கியவைகள் மீட்டும் உதிக்க மிச்சமாய் இருப்பவர்.
பெருமை உடையவர் என்பதும் ஆம்.
36-3. கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ.
கொக்கின் இறகும் ஆம்.
44-4. தூமதி - ஒருகலைப் பிறையாதலின்
களங்கம் இல்லாத மதி. இறைவன் அணிந்தமையின்
தூமதி எனலுமாம்.
50-4. மெய்யராகிப் பொய்யைநீக்கி
- மெய்யராகி எனவே பொய்யை நீக்கி என்பது பெறப்படவும்
மீட்டும் கூறியது வற்புறுத்த. தத்துவஞான உணர்ச்சி
உடையவராய்ப் பொய்யறிவை விடுத்து என்றுமாம்.
51-1. ஈர் உரிவை - கிழிக்கப் பெற்ற
தோல், உதிரப்பசுமை கெடாத ஈரமாகிய தோல்
என்பதும் ஆம்.
73-3. எரியிடைமூன்றினர் -
நெருப்பில் சத்தமும் ஸ்பரிசமும் உருவமுமாகிய மூன்று
தன்மாத்திரைகளாய் இருப்பவர். ஆகவனீயம் முதலிய
முத்தீயாய் இருப்பவர் என்றுமாம்.
73-3. மண்ணிடை ஐந்தினர் - மண்ணில்
சத்தம், ஸ்பரிசம், உருவம், இரதம்,
கந்தம் என்ற ஐந்து தன்மாத்திரைகளாய் இருப்பவர்.
முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம்,
நெய்தல் என்ற ஐந்திணைகளாய் இருப்பவர் எனலுமாம்.
82-5. பெண்ணுக்கு அருள் செய்த
பெருமான் - மன்மதனை
|