531. திங்களுச்சி மேல்விளங்குந்
தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன்
என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந்
தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான்
மேயது நள்ளாறே. 6
533. சிட்டமார்ந்த மும்மதிலுஞ்
சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ
றாடுவ தன்றியும்போய்ப்
__________________________________________________
என்று அடிபரவவும், தலையால் தன்னை
வணங்கும் அடியவர்களும் எங்கள் முடிமீது விளங்கும்
நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும்
சிவபிரான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
கு-ரை: உச்சி - தலை. எங்கள்
உச்சியின்மேல் இருக்கின்றார் எம்மிறைவன்
என்று தேவர்கள் வணங்க, தலைவணங்கும் அடியார்களும்
நமது உச்சியிலுள்ளான் (எனக்கூற இருக்கும்) நம்
பெருமான் மேயது நள்ளாறு என இயைத்துப் பொருள்
காண்க.
7. பொ-ரை: கொடிய ஒளி
பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும்
ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும்
சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி,
விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம்
பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
கு-ரை: விண் கொள் முழவு - மேகத்தை
யொத்த முழவம்; அல்லது ஆகாயத்தின் தன்மையாகிய
சப்தத்தைக் கொண்டிருக்கின்ற முழவுமாம்.
அஞ்சிடம் - அஞ்சத்தக்க இடமாகிய மயானம்.
8. பொ-ரை: பெருமை மிக்க
முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய
தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து,
திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம்
என்னும் அணிகலன் கட்டிய
|