பக்கம் எண் :

642திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


50. திருவலிவலம்

பதிக வரலாறு:

திருவாரூர்ப் புற்றிடங்கொண்டபெருமானைச் சேவித்துச் சிலநாள் தங்கியிருந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் வளமிகுந்த வலிவலத்தை அடைந்தார்கள். மனத்துணைநாதரை வணங்கி இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். இது எந்த யாத்திரையில் என்பது அறியக்கூடவில்லை.

பண்: பழந்தக்கராகம்

பதிக எண்: 50

திருச்சிற்றம்பலம்

536. தண்புனலும் வெண்பிறையுந்

தாங்கிய தாழ்சடையன்

நண்புநல்லார் மல்குகாழி

ஞானசம் பந்தன்நல்ல

பண்புநள்ளா றேத்துபாடல்

பத்தும் இவைவல்லார்

உண்புநரங்கி வானவரோ

டுலகில் உறைவாரே. 11

__________________________________________________

1. பொ-ரை: திருவலிவலம் மேவிய இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் வெஞ்சொல் தவிர்ந்து தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாமமாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.

கு-ரை: வலிவலம் மேயவனே! மனம் ஒன்றி, வஞ்சம் நீங்கி இனிய கூறி, காமமாதிகடிந்து, உனதுநாமத்தைச் சொல்ல, தேவரீர் வந்து அருள வேண்டும் என்கின்றது. ஒல்லை - வேகம். அதாவது பரபரப்பு. கள்ளம் -

வஞ்சனை. வெய்ய சொல் - கொடுஞ்சொல். தூய்மை செய்து - மனத்தைப் பண்படுத்தி. நாமம் - திருவைந்தெழுத்து. வல்லவாறு - அடியேனுடைய தகுதி ஏற்க வல்லவாறு. இறைவற்கு வல்லவாறு என்னு உரைப்பாரும் உளர்.