பக்கம் எண் :

646திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


543. தாயும்நீயே தந்தைநரயே

சங்கரனே யடியேன்

ஆயும்நின்பா லன்புசெய்வா

னாதரிக்கின் றதுள்ளம்

ஆயமாய காயந்தன்னு

ளைவர்நின்றொன் றலொட்டார்

மாயமேயென் றஞ்சுகின்றேன்

வலிவலமே யவனே. 7

544. நீரொடுங்குஞ் செஞ்சடையாய்

நின்னுடையபொன் மலையை

வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற

வேந்தனிரா வணனைத்

__________________________________________________

போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப் பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து அருள்புரிவாயாக.

கு-ரை: புண்ணியனே! காலகாலா! நீலகண்டா! வந்து அருள் செய் என்கின்றது. நண்ணலார் - பகைவர். வரி அரவு - வரிந்து கட்டப்பட்ட பாம்பு.

7. பொ-ரை: திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட இவ்வுடலிடைப் பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.

கு-ரை: சுற்றமும் மற்றெல்லாமும் நீயே என்கின்றது. ஆயும் - சிவஞானம் கைவரப்பெற்ற ஆன்மாவினால் ஆராயப்படுகின்ற. ஆயம் ஆய - படைக்கப்பெற்ற. ஐவர் - பஞ்சேந்திரியங்கள் ஒன்றல் ஒட்டார் - நின்னோடு பொருந்தவிடார்.

8. பொ-ரை: திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத்